2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் திகதி, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கு பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க அவர்கள், சப்போரோ வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் (Sapporo Chamber of Commerce and Industry) உப தலைவர் திரு. தகாஹிரோ நகாதா மற்றும் அச்சபையின் உறுப்பினர்களை அதன் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். ஹொக்கைடோவின் ஒதாரு நகருக்கான இலங்கையின் கௌரவத் தூதுவர் திரு. கென் யமாஷிதாவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துதல், திறன்மிகு இலங்கை தொழில்வல்லுநர்களுக்கு சப்போரோ நகரில் உள்ள வேலைவாய்ப்பு சாத்தியக்கூறுகளை ஆராய்தல், மற்றும் ஜனவரி 14–17 வரை நடைபெறவுள்ள 'இலங்கை எக்ஸ்போ' (Sri Lanka Expo) நிகழ்வில் பங்கேற்குமாறு இச்சபையின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
