28 ஜூலை 2026 அன்று, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியை பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) தலைவர் திரு. கோசல விக்கிரமசிங்க ஆகியோர், SLBFE பிரதிநிதிகளின் அதிகாரப்பூர்வ ஜப்பான் விஜயத்தின் போது, MAFF இன் ஏற்றுமதி மற்றும் சர்வதேச விவகாரங்கள் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுகினாகா அட்சுஷி அவர்களைச் சந்தித்து பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தினர். வேளாண்மை மற்றும் மீன்பிடித் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பால் திறமையான இலங்கை மனிதவளத்திற்கான வாய்ப்புகளை விரிவாக்குவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இச்சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியது. இச்சந்திப்பில் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
