இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான பொருளாதாரம் மற்றும் வணிக ரீதியிலான ஈடுபாடுகளை உயர் மட்ட சர்வதேச தளங்கள் ஊடாக வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க அவர்கள் Nikkei Inc. இன் உலகளாவிய நிகழ்வுகளுக்கான நிர்வாக தயாரிப்பாளர் திரு. ரின்இசிரோ நகசாவா அவர்களை அண்மையில் சந்தித்துப் பேசினார்.
ஆசியாவின் முன்னணி அரசியல் தலைவர்கள், வணிக நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் Nikkei இன் புகழ்பெற்ற 'Future of Asia' மன்றத்தில் இலங்கையின் பிரதிநிதித்துவம் குறித்து இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் சர்வதேச பொருளாதார முகம்முகத்தை மேம்படுத்துவதற்கும், அதன் முதலீடு மற்றும் வர்த்தக திறன்களை விளம்பரப்படுத்துவதற்கும், முன்னணி ஜப்பானிய மற்றும் ஆசிய வணிக சமூகங்களுடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய தளங்களின் முக்கியத்துவத்தை தூதுவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த மன்றத்தில் இலங்கையின் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு திறம்பட அமைத்து, அதிகபட்ச பொருளாதார மற்றும் வணிக தாக்கத்தை பெற முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
ஆசிய பிராந்தியத்தில் வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகக் கூட்டாண்மைகளுக்கான ஒரு போட்டித் தளமாக இலங்கையை மேம்படுத்துவதில் Nikkei Inc. நிறுவனத்துடன் மேலும் இணைந்து பணியாற்ற இலங்கை தூதரகம் எதிர்பார்க்கிறது. இச்சந்திப்பில் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் (வணிகம்) அவர்களும் கலந்துகொண்டார்.
