ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2026 ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெற்ற "இலங்கையின் அனுப்பி வைக்கும் நிறுவனங்களுக்கான சிறப்பு கருத்தரங்கு" வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதை ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகம் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறது.வெளிநாட்டு மனிதவள கவுன்சிலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு, புதிய "குறிப்பிட்ட திறமை வாய்ந்த பணியாளர்" மற்றும் "பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு" அமைப்புகள் உட்பட, ஜப்பானின் மாற்றமடைந்து வரும் வேலைவாய்ப்புச் சூழல் குறித்த விலைமதிப்பற்ற தகவல்களை வழங்கியது.இக்கருத்தரங்கை நடத்தி, எமது அனுப்பி வைக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான சட்டக்கூறுகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுதல் குறித்த தனது நிபுணத்துவ வழிகாட்டலை வழங்கிய எஃப்.எச். சி சட்ட ஆலோசகரான சட்டத்தரணி திரு. ஷோஹே சுகிதா அவர்களுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.நிகழ்வில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்காக, இந்த கருத்தரங்கின் பதிவை தேவைக்கேற்ப பார்வையிடும் வசதியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தயவுசெய்து கீழ்க்காணும் இணைப்பின் மூலம் இந்த அமர்வை அணுகவும்: https://forms.gle/wQa8iQnnnHktQiZr9
